Saturday, January 30, 2021

எடப்பாடி உண்மையில் தமிழர்தானா?

எடப்பாடி உண்மையில் தமிழர்தானா? எடப்பாடி பழனிச்சாமி தமிழர் என்கின்றார்கள். தமிழக முதலமைச்சரான அவரால் நடந்தது கொலை என்றுகூட சொல்ல முடியவில்லையே. அது ஏன்? நாலு மீனவர்களும் சிங்கள கடற்படையால் எரித்துக் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எடப்பாடி நடந்தது விபத்து என்கிறார். அது ஏன்? கொலைக்கும் விபத்திற்கும்கூட வித்தியாசம் தெரியாதவரா தமிழக முதலமைச்சர் எடப்பாடி? இறந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபா தருவதாக அறிவித்துள்ளார். தமிழக மீனவனின் உயிர் பெறுமதி பத்து லட்சம் ரூபா மட்டும்தானா? நாளைக்கு எடப்பாடியை கொன்றுவிட்டு அவர் குடும்பத்திற்கு பத்து லட்சம் தருவதாக கூறினால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா? சிங்கள கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றுகூட ஏன் எடப்பாடியால் கோர முடியவில்லை? இனி இப்படி ஒரு கொலை நடக்கக்கூடாது என்பதற்காவது இம்முறை நடவடிக்கை எடுக்கும்படி எடப்பாடி கோரலாம்தானே? இதுவே ஒரு மலையாளியோ அல்லது வங்காளியோ கொல்லப்பட்டிருந்தால் அவர்களின் முதலமைச்சர் இப்படியா நடந்து கொள்வார்? சோனியா காந்தி தடுத்தும் ஒரு இத்தாலி கப்பல் கப்டனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியவர் அல்லவா கேரள முதலமைச்சர். ஒரு மலயாளி முதலமைச்சருக்கு இருக்கும் தைரியம்கூட தமிழக முதலமைச்சருக்கு இல்லையே?

No comments:

Post a Comment