Saturday, January 30, 2021

எதைச் சொல்லி இந்திய ராணுவத்தை வாழ்த்துவது?

எதைச் சொல்லி இந்திய ராணுவத்தை வாழ்த்துவது? இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமலஹாசன் அவர்கள் உழவர்தின மற்றும் ராணுவ தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நல்லது. ஆனால் அந்த உழவர்கள் கடந்த இரு மாதங்களாக டில்லியில் போராட்டம் நடத்துவதற்கு தமது ஆதரவை ஏன் கமலஹாசன் தெரிவிக்க முடியவில்லை? பரவாயில்லை. ஆனால் இந்திய ராணுவத்தை தானும் வாழ்த்தியதுடன் அனைவரும் வாழ்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய ராணுவத்தை வாழ்த்துவதில் எமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் என்ன சொல்லி வாழ்த்துவது? அமைதிப்படையாக சென்று ஈழத் தமிழர்களை கொன்றதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது, காஸ்மீரில் அந்த மக்களை சித்திரவதை செய்து கொல்வதை கூறி வாழ்த்துவதா? அல்லது, மணிப்பூரில் இருந்து ராணுவம் வெளியேறவேண்டும் என பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தியதைக்கூறி வாழ்த்துவதா? அல்லது, சதீஸ்கரில் மலைவாழ் பெண்களை மாவோயிஸ்டுகள் என்றுகூறி பாலியல் வல்லறவு செய்து கொல்வதை சொல்லி வாழ்த்துவதா? இவை எல்லாம் இந்திய ராணுவத்தின் பெருமைகள் என கமல்ஹாசன் கருதுவாரானால் அவர் ஏன் தன் பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்பக்கூடாது? ஏன் எப்பவும் ஏழைகளின் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும்? கொஞ்ச நாளைக்கு இந்த நடிகர்கள், முதலாளிகள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக தியாகம் செய்யலாமே? இதில் கொடுமை என்னவென்றால் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி என்பவர் ராணுவத்தை எல்லைச்சாமிகள் என்று கூறியிருக்கிறார். அவருடைய மனைவி ஒரு ஈழத் தமிழச்சி. அவர் தன் மனைவியிடம் கேட்டாலே இந்திய ராணுவம் எல்லைச் சாமியா அல்லது பொல்லாத ஆசாமிகளா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment