Saturday, January 30, 2021

கடந்த 60 நாட்களாக ஜனநாயக வழியில் அமைதியாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது

கடந்த 60 நாட்களாக ஜனநாயக வழியில் அமைதியாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது வன்முறையை இந்திய அரசு ஏவியுள்ளது. ஒரு விவசாயி பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுவிட்டதாக அறிய வருகிறது. பலர் காயமடைந்துள்ளனர். டில்லியில் இணைய சேவையை அரசு முடக்கியுள்ளனது. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என அஞ்சப்படுகிறது. ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் எப்படி வன்முறை மூலம் அரசு அடக்கியதோ, ஜல்லிக்கட்டு மக்கள் போராட்டம் எப்படி வன்முறை மூலம் அரசு அடக்கியதோ அதேபோன்று விவசாயிகளின் போராட்டத்தையும் அரசு வன்முறை மூலம் அடக்க முனைகிறது. இப்போது எழும் முக்கிய கேள்வி என்னவெனில் “மக்கள் போராட்டங்களை அரசு வன்முறை மூலம் அடக்க முனைந்தால் அதை மக்கள் எப்படி எதிர் கொள்ள வேண்டும்”என்பதே. அரசு வன்முறையை ஏவினால் மக்கள் அதே வன்முறை மூலம் பதில் அளிப்பதன் மூலமே தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்பதன் சாரம்சம் இதுவே.

No comments:

Post a Comment