Saturday, January 30, 2021

முத்துக்குமாரை நினைவில் கொள்வோம்!

•முத்துக்குமாரை நினைவில் கொள்வோம்! ஈழத் தமிழரைக் காக்குமாறுகோரி தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் துறந்த முத்துக்குமாரின் 12வது நினைவு தினம் . (29.01.2021) அவர் உயிர் துறந்தபோது “உன் மூச்சுக்காற்று சோனியாவை எரிக்கும்” என்று பாட்டு பாடினார்கள். ஆனால் அவ்வாறு பாடியவர்கள் மதவாத மோடியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அன்னை சோனியாவே வருக என்று இப்போது பாட ஆரம்பித்துவிட்டார்கள். என் பிணம்கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று கூறியவர் இப்போது ராகுல் காந்தியின் தலைமையில் தேசம் காக்க மாநாடு நடத்துகிறார். காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து முத்துக்குமார் தன் உயிர் துறந்தார். அவரின் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுக வையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். சோனியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்த முத்துக்குமார் தன் முகத்தை தீயினில் எரித்தார். ஆனால் ஈழத் தமிழ்தலைவர் ஒருவர் “அன்னை சோனியாவின் முகத்தில் இரக்கத்தை கண்டேன்” என்று அறிக்கை விடுகிறார். மன்னித்தவிடு முத்தக்குமாரா! உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை. தமிழ்நாட்டில் சட்டசபைத்தேர்தல் வருகிறது. இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் வருகிறது. அதில் எப்படி பதவி பெறுவது என்பதே இப்போது எமது தலைவர்களின் கவனம் எல்லாம்.

No comments:

Post a Comment