Saturday, January 30, 2021

பேரறிவாளன் விடுதலை,

•பேரறிவாளன் விடுதலை, ஆளுநர் உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகிறாரா? அல்லது, உச்சநீதிமன்றமும் ஆளுநருடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறதா? தமிழக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவெடுப்பார் என மத்திய அரசு கடந்த 21ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஒரு வாரம் கடந்த நிலையில் ஆளுநர் முடிவு எடுக்கவும் இல்லை. பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் விடுதலை செய்யப்படவும் இல்லை. ஆளுநரும் மோடி அரசும் உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனரா? அல்லது உச்சநீதிமன்றமும் மோடி அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்களா? மோடி அரசு எழுவர் விடுதலையை தாமதப்படுத்த முடியுமேயொழிய ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனெனில் இந்த எழுவர் விடுதலை என்பது எட்டுக்கோடி தமிழ் மக்களின் விருப்பமாகும்.

No comments:

Post a Comment