Saturday, January 30, 2021

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா?

•பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? “தன் மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று 30 வருடமாக ஒரு தாய் தவமிருக்கிறார். அந்த தாய் அற்புதமானவர்” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் கூறினார். அவர் பேரறிவாளன் விடுதலை குறித்து பேச வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அவ்வாறு பேசுவதால் அவருக்கும் பெரிதாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. இருப்பினும் அவர் தனக்கு கிடைத்த அந்த மிகப்பெரிய மேடையில் பேரறிவாளன் விடுதலை குறித்து கூறிய அந்த வரிகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. நாளை உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை இடம்பெறவுள்ளது. உச்சநீதிமன்றமாவது இந்த எழுவர் விடுதலைக்கு வழி சமைக்குமா என்பதே இப்போது உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

No comments:

Post a Comment