Saturday, January 30, 2021

ஆரிக்கு எமது வாழ்த்துகள்!

ஆரிக்கு எமது வாழ்த்துகள்! எல்லோரும் திருமணம் செய்தால் எங்கேயாவது ஒரு சுற்றுலா இடத்திற்கு மனைவியை அழைத்துச் செல்வார்கள். ஆனால் ஆரி அவர்கள் 25 வருடங்களாக தம் உறவுகளை சந்திக்க முடியாமல் இருந்த மனைவியை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று சந்திக்க வைத்தார். சிறந்த தமிழ் இன உணர்வாளரான ஆரி அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆரியை வெற்றியாளராக அறிவிக்க மாட்டார்கள் என்ற சந்தேகம் கடைசி நாள்வரை இருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடந்துவிடாமல் அமோக ஆதரவை வழங்கி ஆரிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர்கள் தமிழ் மக்களே. ஆரி வென்ற செய்தியைவிட தமிழ்நாட்டில் ஒரு தமிழ் இன உணர்வாளர் வெற்றி பெறும் சூழ்நிலையை தமிழ் மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதே மகிழ்சியான செய்தியாக இருக்கிறது.

No comments:

Post a Comment