Saturday, January 30, 2021

வேலாயுதம்!

•வேலாயுதம்! இது நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் படம் பற்றிய பதிவு அல்ல. இது முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேல் ஆயுதம் பற்றிய பதிவு. இந்துத்துவவாதிகள் கடவுள் ராமரை முன்னிறுத்தும்போது அதற்கு பதிலாக ராமர் கடவுள் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படல் வேண்டும். ஆனால் தமிழத்;தேசியவாதிகள் சிலர் தமிழ்க் கடவுள் என்று முருகனை முன்நிறுத்துகிறார்கள். கடவுள் முருகனும் தமது ராமரின் உறவினர்தான் என்று சொல்லிக்கொண்டு தமிழக பாஜக தலைவர் வேல் யாத்திரை செல்கிறார். சரி. முருகன் ராமரின் உறவினர் என்றால் வட இந்தியாவில் எங்கேயும் முருகன் கோவில் ஏன் இல்லை என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. தமிழகத்தில் வேல் யாத்திரை செய்யும் பாஜக வட இந்தியாவில் ஏன் செய்வதில்லை என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. ஆனால் இங்கு வேடிக்கை என்னவெனில் கடவுள் இல்லை என்று கூறிவந்த திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும் வேல் ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். சரி. தேர்தல் வந்தால் இந்த அரசியல்வாதிகள் பதவி பெறுவதற்காக எதையும் தூக்குவார்கள் என்பது தெரிந்ததுதானே. ஆனால் இவர்கள் தூக்கும் அந்த வேல் ஆயுதம் எமக்கு உணர்த்தும் பொருள் என்ன? அல்லது அதன் அர்த்தம் என்ன? அநியாயம் செய்த சூரன் என்ற அரக்கனை வேல் என்ற ஆயுதம் ஏந்தி முருகன் அழித்ததாக கதைகள் கூறுகின்றன. முருகன் கடவுளா அல்லது தமிழர்களின் மூத்த குடியா என்ற விவாதத்திற்கு அப்பால் அவர் வேல் என்ற ஆயுதம் எந்தியே அரக்களை அழித்தார் என்பது யாரும் மறுக்க முடியாத செய்தி ஆகும். முருகன் தேர்தல் பாதை மூலம் அரக்கனை அழிக்கவில்லை. அல்லது அகிம்சை மூலம் அழிக்க முடியும் என்றும் கூறவில்லை. முருகன் காட்டிய வழியில் ஈழத்தில் போராளிகள் துப்பாக்கி எந்தி போராடியபோது முருகனை கடவுள் என்பவர்கள் போராளிகளை பயங்கரவாதிகள் என்கின்றனர். குறிப்பு – சரவணபவன், சுப்பிரமணியன் என்ற பெயர்கள் உயர் சாதியினருக்கும் கந்தன், முருகன் வேலன் என்ற பெயர்கள் தாழ்த்தப்பட்;டசாதி மக்களின் பெயராகவும் இருப்பதன் காரணம் என்ன?

No comments:

Post a Comment