Saturday, January 30, 2021

ஒருபுறம் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால்

ஒருபுறம் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடிக்கிறார்கள் மறுபுறம் முல்லைத்தீவில் இந்துக்கடவுள் சின்னங்களை அகற்றிவிட்டு புத்தர் சிலையை நிறுவி அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். தமிழ் மக்களால் ஒருநாள்கூட நிம்மதியாக காலை நீட்டி உறங்க முடியவில்லை. கூனிக்குறுகியே வாழ வேண்டியிருக்கிறது. தமிழருக்கு தீர்வு தரப்படும் என்று சொல்லி சொல்லிக்கொண்டே மிச்சமிருக்கும் கட்டின கோவணத்தையும் உருவுகிறார்கள். பௌத்த பேரினவாதம் குறித்து இந்திய அரசுக்கும் அக்கறை இல்லை. இந்திய உளவுப்படையால் அனுப்பிவைக்கப்பட்ட சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்திற்கும் அக்கறை இல்லை. தமக்கு உதவ யாரும் இல்லை என்பதை மட்டுமன்றி தாமே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் தமிழ் மக்கள் உணர வேண்டிய நேரம் இது.

No comments:

Post a Comment