Saturday, January 30, 2021

கனடாவில் தமிழருக்கு நினைவு சின்னம்!

•கனடாவில் தமிழருக்கு நினைவு சின்னம்! யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்ட செய்தி அறிந்த கனடா பிரெம்டன் நகரசபை உறுப்பினர் ஒருவர் கனடாவில் தமிழருக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்துள்ளார். 3ம் வட்டார உறுப்பினரான Martin Madeiros என்பவர் கொண்டுவந்த அத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த அந்த உறுப்பினர் தமிழ் மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர். தமக்காக மாண்டவர்களின் நினைவு சின்னம் என்பது தமிழருக்கு வெறும் சீமெந்தும் கற்களும் அல்ல. மாறாக உயிருடனும் உணர்வுடனும் கலந்தது. இது கனடா நகரசபை உறுப்பினரான Martin Madeirosக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் முட்டாள்பயல் கோத்தபாயாவுக்கும் அவரது கைத்தடி யாழ் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்றும் மட்டும் நன்கு தெரிகிறது. அதாவது கோத்தபாயாவின் ஆட்சி முடிவதற்குள் தமிழ் மக்களுக்கு ஒரு வழி நிச்சயம் பிறந்துவிடும்.

No comments:

Post a Comment