Saturday, January 30, 2021

யாழ்ப்பாணத்தில் கொரோனோவை பரப்பியவர்

யாழ்ப்பாணத்தில் கொரோனோவை பரப்பியவர் என சர்ச்சைக்குள்ளான சுவிஸ் போதகர் மரணமடைந்துள்ளார். அவர் நம்பிய ஆண்டவர் அவரை ஏன் காப்பாற்றவில்லை என என்னால் கேட்க முடியும். அவ்வாறு கேட்டால் “ அவரை இத்தனை நாள் காப்பாற்றியதே அந்த ஆண்டவர்தான்” என்று அவரது விசுவாசிகள் பதில் தரக்கூடும். “அப்படியென்றால் இப்போது ஏன் அந்த ஆண்டவர் கைவிட்டார்” என பதிலுக்கு நான் கேட்க முடியும். அதற்கு “ இத்தனைநாள் செய்த சேவை போதும் என்று ஆண்டவர் தன்னிடம் அழைத்துக்கொண்டார்” என்று விசுவாசிகள் பதில் சொல்லக்கூடும். இதற்குமேல் என்னால் உரையாட முடியாது. ஏனெனில் அவர் ஆண்டவருடன் இருக்கிறாரா என ஆராயும் கருவிகள் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் அவர் ஆண்டவருடன் இருக்கிறார் என்பதை இந்த விசுவாசிகளாலும் நிரூபிக்க முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். ஏனெனில் இது அவர்களின் வெறும் (மூட)நம்பிக்கை மட்டுமே.

No comments:

Post a Comment