Saturday, January 30, 2021

மிழனுக்கு மூளை தலையில் இல்லை,

•தமிழனுக்கு மூளை தலையில் இல்லை, முழங்காலில் இருப்பதாக நினைக்கும் இந்திய அரசு விசுவாசிகள்! இந்தியாவுக்கு சொந்தாமான அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஊடுருவி ஒரு கிராமத்தையே புதிதாக நிர்மாணித்துள்ளார்கள். ஒரு கிராமத்தையே புதிதாக கட்டும்வரை இந்திய பிரதமர் மோடி என்ன பண்ணிக் கொண்டிருந்தார் என்று எதிர்க்கட்சிகள் வறுத்தெடுக்கின்றனர். சரி. இது அவர்கள் பிரச்சனை. நாம் எமது விடயத்திற்கு வருவோம். இது குறித்து எமது இந்திய அரசு விசுவாசிகளின் கருத்து என்ன? இங்கு எனது கேள்வி என்னவென்றால் தனது பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் கட்டியதையே கண்டுக்காத இந்திய அரசு இலங்கையில் சீனா ஊடுருவிட்டது என்று எமக்கு தமிழீழம் பெற்று தரும் என்று எப்படி நம்புவது? இதுகூடப் பரவாயில்லை. தமிழக தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடி கச்சதீவை இலங்கையிடமிருந்து பெறப்போகிறாராம். எனவே மோடியின் பாஜக வை ஆதரியுங்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்கிறார். இவர்கள் எல்லாம் தமிழனுக்கு மூளை முழங்காலில் இருப்பதாக நினைக்கின்றனர் போலும். அதனால்தான் தாங்கள் என்ன சொன்னாலும் தமிழர்கள் நம்புவார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் இந்திய அரசு எது சொன்னாலும் நம்புவதற்கு இது 1983 அல்ல. இது 2021.

No comments:

Post a Comment