Saturday, January 30, 2021

சிங்கள கடற்படையால் நான்கு தமிழக மீனவர் படுகொலை!

•சிங்கள கடற்படையால் நான்கு தமிழக மீனவர் படுகொலை! இந்தியாவின் எதிரி நாடு என்று கருதப்படும் பாகிஸ்தான்கூட இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. ஆனால் நட்பு நாடு என்று கூறப்படும் இலங்கை அரசானது இதுவரை 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றுள்ளது. ஏனெனில் கொல்லப்படுபவர்கள் இந்திய மீனவராக இந்திய அரசு கருதவில்லை. மாறாக தமிழக மீனவராகவே கருதுகிறது. அதனால்தான் தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் போர்க்கப்பல் இலவசமாக வழங்கி உதவி செய்கிறது. தன்னுடைய நாட்டு மீனவனைக் கொல்லும் இன்னொரு நாட்டு படைக்கு பயிற்சி, ஆயுதம், நிதி உதவி வழங்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. முன்பு புலிகள் இருக்கும்போது புலிகள் என நினைத்து தவறுதலாக சிங்கள கடற்படை சுட்டுவிட்டது என்று நியாயம் சொன்னார்கள். இப்போது புலிகளும் இல்லை. போரும் இல்லை. அப்புறம் மீனவர்களை கொன்றமைக்கு என்ன நியாயம் சொல்லப் போகிறார்கள்? தமிழகத்தில் சிங்கள தூதுவர் சென்னையில் இருக்கிறார். சிங்கள புத்தபிக்கு இருக்கிறார். பல சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பல சிங்களவர் திருப்பூர் உட்பட பல இடங்களில் வேலை செய்கின்றனர். வெளிநாடுகளுக்கு செல்வதற்குகூட சிங்களவர்கள் சென்னை விமான நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்க என்ன தைரியத்தில் சிங்கள கடற்படை தமிழக மீனவனைக் கொல்கிறது? ஏனெனில் தமிழக தலைவர்கள் கோமாளிகள். அவர்கள்; தம்மீது ஒரு கல் எறியக்கூட தைரியம் அற்றவர்கள் என சிங்கள அரசு நினைக்கிறது. குறிப்பு - சிங்கள கடற்படை நாலு தமிழ் மீனவர்களை பிடித்து முழ்கடித்து கொல்லும்வரை இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருந்தது?

No comments:

Post a Comment