Saturday, January 30, 2021

பேரறிவாளன் விடுதலை ?

•பேரறிவாளன் விடுதலை ? 3 அல்லது 4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று இதுவரை வாதாடி வந்த மத்திய அரசு தற்போது ஆளுநர் முடிவெடுப்பார் என கூறியுள்ளது திடீர்த் திருப்பமாக அமைந்துள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவித்து ஆளுநர் முடிவெடுப்பாரா? அல்லது தமிழக அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்புவாரா? என்பது இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும். இப்போது தேர்தல் காலம் என்பதால் ஆளுநர் ஒருவேளை மனுவை தீருப்பி அனுப்பினாலும் உலகத் தமிழர்களின் விருப்பத்திற்கு அமைய தமிழக அரசு இந்த எழுவரை விடுதலை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விடை இன்னும் 3 நாட்களில் தெரியும்.

No comments:

Post a Comment