Saturday, January 30, 2021

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டமைக்கு இலங்கை அரசே காரணம் என்று இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த கரடி குடித்துவிட்டு உளறுவதை பார்க்கும்போது உடைக்கப்பட்டமைக்கு ஒருவேளை இந்திய பாஜக அரசுதான் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஒரு சினிமாப் படத்தில் ரகுவரன் கூறுவார் “ அவர்களே குண்டு வைப்பார்களாம். அப்புறம் அவர்களே அதை எடுப்பார்களாம்” அதுபோல் யாழ் இந்திய தூதரே இடிக்கவும் கூறினார். அப்புறம் அவரே மீள கட்டவும் கூறியிருக்கிறாரோ என நினைக்க தோன்றுகிறது. 38 வருடமாக இந்தியாவில் அகதியாக இருக்கும் ஈழத்தமிழருக்கு குடியுரிமை வழங்க அக்கறை கொள்ளாத பாஜக அரசு பல வருடங்களாக திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ தமிழ் அகதிகளை விடுதலை செய்ய அக்கறை எடுக்காத பாஜக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டமைக்கு அக்கறை எடுத்தது என்று கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது?

No comments:

Post a Comment