Saturday, January 30, 2021

ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! இலங்கையில் இருந்தபோது அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரது மல்லிகை இதழை தவறாமல் வாங்கி படித்திருக்கிறேன். தனி ஒரு மனிதராக மல்லிகை இதழை பல வருடங்களாக அவர் வெளியிட்டு வந்தமையை சாதனையாக பலர் கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவர் தனது முற்போக்கு கருத்துகளை கைவிடாமல் இதழை வெளியிட்டமையையே சாதனையாக கருதுகிறேன். ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்கள்.

No comments:

Post a Comment