Monday, April 29, 2019

மறப்பது ஜனாதிபதி மைத்திரி வழமை

•மறப்பது ஜனாதிபதி மைத்திரி வழமை
நினைவூட்ட வேண்டியது எமது கடமை
ஜனாதிபதி அங்கிள்!
கடந்த வருடப்பிறப்புக்கு முன்னர் அப்பா வருவார் என்றீர்களே
அடுத்த வருடப் பிறப்பும் வரப் போகிறது
ஆனால் அப்பா இன்னும் வரவில்லையே?
குழந்தைகள் என்றால் நீங்கள் இரங்குவீர்கள் என்றார்களே
ஆனால் நீங்கள் எங்களுக்கு இரங்கவில்லையே?
குழந்தையானாலும் அது தமிழ் என்றால் இரங்கமாட்டீர்கள் போலும்
சம்பந்தர் அய்யாவுக்கு சொகுசு பங்களா பெறுவதற்காக
உங்களுடன் பேசிய சுமந்திரன் அங்கிளுக்குகூட
எங்களுக்காக பேச வேண்டும் என்று தோன்றவில்லையே
என்ன செய்வது?
கடவுள்கூட எங்களை கைவிட்டுவிட்டாரே!

No comments:

Post a Comment