Monday, April 29, 2019

எது விதைக்கப்பட்டதோ

•எது விதைக்கப்பட்டதோ
அதுவே அறுவடை செய்யப்படுகிறது!
மத அடிப்படைவாதிகளை அனுமதித்ததன் விளைவை மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல இந்து. கிருஸ்த்தவ மற்றும் பௌத்த மத அடிப்படைவாதிகளும் பயங்கரவாதிகளே.
அனைத்து மத அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும். இதற்காக மக்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
இன்று
01. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்
02. நீர்கொழும்பு கட்டுவித்த தேவாலயம்
03. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்
04. கொழும்பு சங்கிரில்லா கொட்டேல்
05. கொழும்பு சினமன் கிரேன்ட் கொட்டேல்
06. கொழும்பு கிங்க்ஸ்பெரி கொட்டேல்
07. தெஹிவல மிருக காட்சிசாலைக்கு முன்பாக கொட்டேல்
08. தெமட்டகொட தொடர்மாடிக்குடியிருப்புக்கு அருகில்
ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் சுமார் 160 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த பயங்கரவாத செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் இது. வதந்திகளுக்கு இடங்கொடாதீர்கள்.
காயம்பட்ட மக்களுக்கு ரத்தம் தேவையாக உள்ளது. எனவே மக்கள் ரத்ததானம் செய்ய வேண்டும்.
மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டால் அதை தமது விடுதலைப் போராட்டமாக மாற்றும் சக்தி மக்களுக்கு உண்டு.

No comments:

Post a Comment