Monday, April 29, 2019

•தமிழ், முஸ்லிம் ஜக்கியம் சாத்தியமா?

•தமிழ், முஸ்லிம் ஜக்கியம் சாத்தியமா?
குண்டு வைத்த பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் ஆனால் முஸ்லிம்கள் எல்லாம் பயங்கரவாதிகள் இல்லை என்று மைத்திரி. ரணில் மகிந்த மட்டுமல்ல சம்பந்தர் அய்யாவும் கூறியுள்ளார்.
ஆனாலும் குண்டுவெடிப்பை அடுத்து முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழ் முஸ்லிம் பிளவு அதிகரிக்கிறது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல இந்திய அமெரிக்க அரசுகள்கூட இனங்களுக்கிடையே பிளவுகளை எற்படுத்த முனைகின்றன.
ஏனெனில் தமக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு திரண்டுவிடக்கூடாது என அவை நினைக்கின்றன.
சம்பூரில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுடன் வேடுவ இன மக்களும் ஜக்கியப்பட்டு போராடியதாலே இந்திய ஆக்கிரமிப்பை விரட்ட முடிந்தது.
அதன் பின்னரே இந்திய உளவு நிறுவனம் இலங்கையில் மக்களிடையே மத ரீதியான பிளவுகளை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது.
அதுமட்டுமல்ல மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் பொதுபலசேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பிற்கும் தற்போது குண்டு வைத்ததாக கூறப்படும் இஸ்லாமிய இயக்கத்திற்கும் ஒரே கணக்கில் இருந்தே பணம் இரகசியமாக வழங்கப்பட்டுள்ளது.
மன்னாரில் 150 வருடங்களுக்கு போதுமான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் வளத்தை கைப்பற்றும் சக்தியே எதிர்காலத்தில் பலமிக்க சக்தியாக இருக்கப்போகிறது.
எனவேதான் மன்னார் மக்களும் சம்பூர் மக்கள் போல் ஒன்றுபட்டு எதிர்த்துவிடக்கூடாது என்பதற்காக மன்னாரில் மத மோதல்கள் திட்டமிடப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகிறது இனிவரும் காலங்களில் மக்கள் இன ரீதியாக மட்டுமன்றி மத ரீதியாகவும் பிளவுபடுத்தப்படப் போகிறார்கள்.
எனவே அனைத்து ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பில் இருந்து இலங்கை மக்கள் விடுதலை பெறுவதற்கு இனங்களுக்கிடையேயான ஜக்கியம் மிகவும் அவசியமாகிறது.
அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கடையேயான ஜக்கியம் இரு இன மக்களுக்கும் அவசியமாகும்.
இதை தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் உணர வேண்டும். உணர்ந்து அதற்காக செயற்பட முன்வர வேண்டும்.
கொஞ்சம் யோசியுங்கள் இஸ்லாமியர்களே!
• இரண்டுஅரோபிய நாடுகள்
• 10 அரேபியரல்லாத இஸ்லாமியநாடுகள்
• கணக்கில் அடங்காத எண்ணெய்வளம்
• அதனால்பெருகும் பணம் மற்றும் ஆயுதங்கள்
• வரலாற்று நியாயங்கள்
• எல்லாம் வல்ல அல்லா
இவைஅனைத்தும்இருந்தும்
அளுத்கமவில் வீடுகள் எரிக்கப்பட்டதை தடுக்கமுடியவில்லை!
அம்பாறையில் நிலம் பறிபோவதை எதிர்க்க முடியவில்லை!
பள்ளிவாசல்களை அகற்றுவதை எதுவும ;செய்யமுடியவில்லை!
“அல்லாவுஅக்பர்”கோசம்போடுவதாலே
வெள்ளிகிழமைகளில ;பிரார்த்திப்பதாலே
எதுவும் ஆகப்போவதில்லை.
கொஞ்சம்யோசியுங்கள் இஸ்லாமியர்களே!
இனியாவது தமிழ் மக்களுடன் ஜக்கியப்படுங்கள். அதன் மூலமே உங்களுக்கான பாதுகாப்பையும் உரிமையையும் பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ குண்டு வெடித்துள்ளது. ஆனாலும் அங்கு தமிழ் மற்றும் இஸ்லாமியரிடையே பிளவை உருவாக்க முடியவில்லை. மாமா மாப்பிளை உறவு முறை கொண்டாடி ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
தமிழக இஸ்லாமிய தலைவர்கள் ஈழத்து இஸ்லாமியர்களுக்கு வழி காட்ட வேண்டும். ஈழத்தில் தமிழ் முஸ்லிம் ஜக்கியம் எற்பட உதவிட வேண்டும்.
தமிழ் முஸ்லிம் ஜக்கியம் சாத்தியமா? என்;று கேட்டால் முதலில் தமிழ் முஸ்லிம் ஜக்கியம் அவசியம் என்பதை உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால் அதன் பின் ஜக்கியம் சாத்தியமே!

No comments:

Post a Comment