Monday, April 29, 2019

•அடிமையாக விழுந்து கிடப்பதைவிட எழுந்து நின்று மடிவது மேல்!

•அடிமையாக விழுந்து கிடப்பதைவிட
எழுந்து நின்று மடிவது மேல்!
இந்த மனிதர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தது கூட தவறு இல்லை
ஆனால் அவர் திமிராக உட்கார்ந்து இருக்க அருகில் இவர் பவ்வியமாக கைட்டி நிற்பதைப் பார்க்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது.
ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்ற மனிதருக்கு முன்னால் இவர் ஏன் கூனிக் குறுகி நிற்கின்றார் அதுவும் மனைவியுடன்.
பார்ப்பாணும் இந்துத்துவாவும் எப்போதும் தமிழனுக்கு எதிராகவே செயற்படும் என்பதற்கு இந்த மனிதர் ஒரு சாட்சி.
இது தெரியாமல் “இந்துத் தமிழீழம்” கேட்டால் இந்துத்வா சக்திகள் ஆதரிக்கும் என்று கூறும் காசி ஆனந்தன் அய்யாவை என்னவென்று அழைப்பது?
இங்கு எனக்கு ஆச்சரியம் என்னவெனில் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக எப்படி இவர்களால் செயற்பட முடிகிறது?
கொஞ்சம்கூட தமிழன் மீது இவர்களுக்கு பயம் இல்லையா?
உலகில் சிங்கள மக்கள் தொகை இரண்டு கோடி மட்டுமே. ஆனால் உலகில் தமிழ் மக்கள் தொகை சுமார் எட்டுக் கோடி.
அப்படியிருக்க, எப்படி எட்டுகோடி தமிழரை கொஞ்சம்கூட பயம் இன்றி மகிந்த ராஜபக்ச போன்றவர்களால் எதிர்க்க முடிகிறது?
அவர்களிடம் எந்த விசேட பலமும் இல்லை. அவர்கள் எமது பலவீனமான துரோகிகளை பயன்படுத்தியே தமிழ் இனத்தை அழிக்கிறார்கள்.
இந்த துரோகிகள் காட்டியும் கூட்டியும் கொடுப்பதால்தான் அவர்கள் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று பகிரங்கமாக கிண்டல் செய்கிறார்கள்.
எனவே யாராவது ஒரு துரோகிக்கு தமிழ்நாட்டில் தகுந்த பாடம் புகுத்தப்பட்டால் அதன்பின்பு இந்த மகிந்த ராஜபக்சாக்கள் உணர ஆரம்பிப்பார்கள்.
இப்போது எம்முன் உள்ள கேள்வி,இந்த துரோகிகளுக்கு யார் தகுந்த பாடம் புகுத்தப் போகிறார்கள்?

No comments:

Post a Comment