Monday, April 29, 2019

இன்று காஷ்மீரிய தேசிய இன விடுதலைப் போராளி யாசின் மாலிக் அவர்களின் பிறந்தநாள் ஆகும்.

இன்று காஷ்மீரிய தேசிய இன விடுதலைப் போராளி யாசின் மாலிக் அவர்களின் பிறந்தநாள் ஆகும்.
முதலில் அவருக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
யாசின் மாலிக் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. அவர் இஸ்லாம் மதத்தை முன்வைத்தும் போராடவில்லை.
ஆனாலும் இந்திய அரசு அவரது அமைப்பை தடை செய்ததோடு அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இங்கு எமது கேள்வி என்னவெனில், இந்தியாவில் ஆயுதப் போராட்டம் தேவையில்லை. தேர்தல் பாதை மூலம் தேசிய இனங்களின் விடுதலையைப் பெறலாம் என்பவர்கள் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்?
குறிப்பாக, நாளை இதேபோன்று நாம் தமிழர் கட்சியும் தடை செய்யப்படலாம். அதன் தலைவர் சீமானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். அப்போது நாம்தமிழர் அமைப்பினர் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலைக்கான பாதை ஆயுதம் எந்திய மக்கள் யுத்தப்பாதையா அல்லது தேர்தல்பாதை என்னும் சரணாகதிப் பாதையா?

No comments:

Post a Comment