Monday, April 29, 2019

இந்த வலி எந்தளவு கொடுமையானது என்று

இந்த வலி எந்தளவு கொடுமையானது என்று
எங்களுக்கு நன்றாகவே தெரியும் - ஏனெனில்
இதை நிறையவே அனுபவித்தவர்கள் நாங்கள்
இந்த நிலை இனி இன்னொருவருக்கு வேண்டாம்
வெறுமனே ஆழ்ந்த இரங்கல் என்று கடந்து செல்ல முடியவில்லை
கடவுளும் குழந்தையும் குணத்தால் ஒன்று என்றார்களே
கடவுள் உதித்த நாளில் இன்னொரு கடவுளை புதைத்து விட்டார்களே?
இன்னொரு முறை இன்னொரு குழந்தைக்கு
இப்படி நடந்து விடாமல் எப்படி தடுக்கப் போகிறோம்?
ஊரடங்கு சட்டம் போடுவதாலோ –அல்லது
கடுமையான அவசரகாலச்சட்டம் அமுல் படுத்துவதாலோ
இத்தகைய சம்பங்களை ஒருபோதும் தடுத்திட முடியாது
மதத்திற்காக குண்டு வைத்தால் சொர்க்கத்திற்கு போகலாம்
என்ற முட்டாள்தனமான கருத்து இருக்கும்வரை
குண்டு வைப்பவர்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்
பௌத்த அடிப்படைவாதிகள் இருக்கும்வரை
இந்து அடிப்படைவாதிகள் இருக்கும்வரை
கிருத்தவ அடிப்படைவாதிகள் இருக்கும்வரை
இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இருப்பார்கள்.
அனைத்து மத அடிப்படைவாதிகள் மீதும்
அரசு நடவடிக்கை எடுக்குமா?

No comments:

Post a Comment