Monday, April 29, 2019

ஏன் இத்தனை நாள் இதனைக் கேட்கவில்லை என்று

ஏன் இத்தனை நாள் இதனைக் கேட்கவில்லை என்று
சம்பந்தர் அய்யா மீது சினம் கொள்வதா- அல்லது
இப்பவாவது அவருக்கு இதனைக் கேட்க தோன்றியிருக்கிறதே என்று
ஆறுதல் அடைவதா என்றும் தெரியவில்லை
ஆனால் அவர் கேட்கும்போதும் சரி 
அல்லது கேட்காமல் இருக்கும்போதும் சரி
அதனை அய்யாவின் “சாணக்கியம்” என்று
எப்போதும் புகழ்பாட ஒரு கூட்டம் இருக்கிறதே
அதை நினைத்து கவலை கொள்வதா அல்லது
இதெல்லாம் தமிழினத்தின் சாபக்கேடு என்று
எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துவிடுவதா?
கலைஞர் கருணாநிதி ஈழத்தில் பிறந்திருந்தால்
இந்நேரம் பிரபாகரன் மகன் டாக்டருக்கு படித்துக்கொண்டிருப்பான்
என்று ஒரு திமுக தலைவர் அண்மையில் பேசியிருந்தார்.
அதற்கு ஒரு உணர்வாளர் கலைஞர் ஈழத்தில் பிறந்திருந்தால்
புலியில் சேர்ந்து போராடி மாவீரர் ஆகியிருப்பார்
அல்லது முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களில் ஒருவராகியிருப்பார்
அல்லது இந்தியா வந்து அகதிமுகாமில் வாடியிருப்பார் என்றுரைத்தார்.
யாருக்கும் எந்த சநதேகமும் தேவையில்லை.
கலைஞர் ஈழத்தில் பிறந்திருந்தால் சம்பந்தர் அய்யாவாக இருந்திருப்பார்.
ஆனால் வருத்தம் என்னவெனில்
தமிழக மக்கள் மீது இரக்கம் கொண்ட எமன்
இன்னும் ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் கொள்ளவில்லையே?

No comments:

Post a Comment