Monday, May 25, 2020

விகடன் விருதை திருப்பியளிக்கும்

•விகடன் விருதை திருப்பியளிக்கும் இன்னொரு ஈழத்து தமிழ் எழுத்தாளர் ! விகடன் குழுமம் 176 ஊழியர்களை தடாலடியாக பணிநீக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இலக்கியவாதிகள் தமக்கு அளித்த விகடன் விருதுகளை திருப்பி அளிக்கின்றனர். அந்த வரிசையில் ஈழத்து இன்னொரு தமிழ் எழுத்தாளரான தமிழ்நதி அவர்கள் விகடன் தனக்கு வழங்கிய இரு விருதுகளையும் திருப்பி அளிக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “எழுத்தோடு தொடர்புடைய ஒருத்தியாக என்னால் ஆற்றக்கூடிய எதிர்வினை ஒன்றுதான். அது, ஆனந்தவிகடனால் எனக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகளையும் திருப்பிக் கொடுப்பது. எழுத்துசார் சக மனிதர்களுக்கான என்னுடைய தார்மீக ஆதரவாகவே விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதைக் கருதுகிறேன். மற்றப்படி இந்த முடிவு ஆனந்தவிகடனை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதையும் அறிவேன்”. “பொருளாதாரரீதியாக நிர்க்கதியாக நிற்கும் தோழர்களுடன் மானசீகமாக உடனிருக்கிறோம்” என்று கூறும் எழுத்தாளர் தமிழ்நதியின் உணர்வுகள் ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். No photo description available. Image may contain: 1 person, selfie and close-up

No comments:

Post a Comment