Monday, May 25, 2020

புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள்

“புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள் “புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றீர்கள் “சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினீர்கள். அதனால் “புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்று கூறினீர்கள். சரி. அப்படியென்றால் “புலிகள் இப்போது இருந்தால் நல்லாய் இருக்குமே” என்று தமிழ் மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? அல்லது யார் காரணம்? ஒருபுறம் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாக போர் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். மறுபுறம் புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். புலிகளை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றால், புலிகள் யாவரும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்றால் எதற்காக இல்லாத புலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்? பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட ஜே.வி.பி இயக்கத்தின் தடையை நீக்கியுள்ளீர்கள். பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீராவுக்கு நினைவு சின்னம் வைக்கவும் ஆண்டுதோறும் நினைவு தினம் கொண்டாடவும் அனுமதிக்கிறீர்கள். ஆனால் தமிழ் மக்கள் தமக்காக மாண்ட மாவீரர்களை நினைவு கூர்வதை தடை செய்வதோடு பேஸ்புக்கில் லைக் போட்டால்கூட கைது செய்து சிறையில் அடைக்கிறீர்கள். புலிகள் எந்த தீர்வுக்கும் வராமல் பிடிவாதம் பிடித்ததால் வேறுவழியின்றி அவர்களை அழித்ததாக கூறுகிறீர்கள். சரி. அப்படியென்றால் புலிகள் இல்லாமல் பத்து வருடம் ஆகிவிட்டது. ஏன் எந்தவொரு தீர்வையும் உங்களால் தமிழ் மக்களுக்கு வழங்க முடியவில்லை? சம்பந்தர் ஜயா தமிழீழத்தை தாம் கோரவில்லை என்றார். சம்பந்தா ஜயா உங்கள் தேசியக்கொடியை உயர்த்திப் பிடித்தார் சம்பந்தர் ஜயா மகிந்த ராஜபக்சாதான் தேசிய தலைவர் என்றார். அவருக்கு நீங்கள் கொடுத்தது என்ன? இப்போது புரிகிறதா தமிழ் மக்கள் ஏன் போராளிகளை விரும்புகிறார்கள் என்று. சம்பந்தர் ஜயாவையும் சுமந்திரனையும் எம்.பி யாக தெரிவு செய்ததால் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் மக்களை மூளையே இல்லாதவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு புரியும் விதத்தில் உங்கள் மொழியில் பதில் தரும் வல்லமை உள்ளவர்கள். Image may contain: 1 person, outdoor Image may contain: one or more people and people standing

No comments:

Post a Comment