Friday, May 29, 2020

தயவு செய்து இங்கே யாரும் கைதட்டாதீர்கள்

•தயவு செய்து இங்கே யாரும் கைதட்டாதீர்கள் அவர் உடனே எழும்பி உரையாற்றிவிடக்கூடும்! இது ஒரு அரசியல்வாதியின் கல்லறையில் எழுதப்படக்கூடிய வாசகம். அரசியல்வாதியான ஆறுமுகம் தொண்டமானுக்கும் இது பொருத்தமானதே. இரண்டு நாட்களுக்கு முன்னர் மலையகத்தில் குளவிக் கடியினால் தொழிலாளி ஒருவர் மரணமடைந்த செய்தி வந்திருந்தது. இது வருடா வருடம் வந்து கொண்டிருக்கும் துயரமான செய்தி. 1991ல் இருந்து பதவியில் இருக்கும் ஆறுமுகம் தொண்டமானால் தனது மக்களை இந்த குளவிக் கடியில் இருந்து மீட்க முடியவில்லை. கேவலம் குளவிக் கடியில் இருந்துகூட தன் மக்களை மீட்க முடியாதவரின் மரணத்தை மலையக மக்களின் பேரிழப்பு என்று எப்படித்தான் கொஞ்சம்கூட கூச்சமின்றி கூறுகின்றார்கள்? கிழக்காசியாவில் மிகப் பெரிய தொழிற்சங்கத்தைக் கொண்டிருக்கும் இந்த தலைவர் அந்த மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை இன்னும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஆனால் உழைத்தவனுக்கு கூலி செல்லுமுன்னரே தொழிற்சங்கத்திற்கான சந்தாப் பணம் இந்த தலைவர் தொண்டமானுக்கு சென்றுவிடுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஹோட்டல் ஒன்றை பொலிசார் ரெய்டு செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் செய்த பெண்களையும் ஆண்களையும் பொலிசார் கைது செய்தனர். பொலிஸ் நிலையத்தில் வைத்து ஆண்களின் விபரத்தை பொலிசார் பதிவு செய்தபோது ஒருவர் தான் இலங்கையில் அமைச்சர் என்றும் தன் பெயர் ஆறுமுகம் தொண்டமான் என்றும் கூறினார். பொலிசாருக்கு ஆச்சரியம். இறுதியாக சென்னையில் உள்ள இலங்கை தூதுவர் வந்து உறுதிப்படுத்தியதால் வழக்கு பதிவு செய்யாமல் அவரை விடுதலை செய்தனர். இப்போது அந்த தொண்டமான் மரணத்தை “இலங்கை மக்களுக்கு பேரிழப்பு” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஒரு அரசியல்வாதி எத்தனை தவறு இழைத்தாலும் அவர் இறந்தவுடன் அவருடைய தவறுகளை மரணம் மன்னித்துவிடும் என ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. இதனால்தான் பல அரசியல்வாதிகள் துணிந்து தவறுகள் செய்கிறார்கள். அவர்கள் திருந்துவதற்கு முயல்வதில்லை. மாறாக இறந்த பின்னும் தவறுகள் விமர்சிக்கப்படும் என்ற சம்பிரதாயம் பேணப்படுமாயின் அரசியலில் மாற்றத்திற்கான ஒரு வழி பிறக்கும். குறிப்பு - மரணம் தவறுகளை மன்னித்துவிடுவதில்லை. Image may contain: 1 person

No comments:

Post a Comment