Monday, May 25, 2020

இந்திய மாவோயிஸ்டுகளின் போராட்டம்

•இந்திய மாவோயிஸ்டுகளின் போராட்டம் ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? 53 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற ஊரில் ஆரம்பித்த மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்று இந்த மாவோயிஸ்டுகளின் இயக்கமானது இந்தியா முழுவுதும் பரவி வேரூன்றியுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் 60 மாவட்டங்களில் இவர்களுடைய ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் சீனாவை விட இந்த நக்சல்பாரி இயக்கமே முதன்மையான எதிரி என்று இந்திய அரசு குறிப்பிடும் அளவிற்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இலங்கையைபோல் நான்கு மடங்கு பெரிய பிரதேசம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. ஈழத்தில் செய்ததுபோன்று சுட்டுக் கொன்றோ அல்லது பெண்களை பாலியல் வல்லுறவு செய்தோ மாவோயிஸ்டுகளின் வளர்ச்சியை இந்திய அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. செப் - 11 க்கு பிறகு உலகில் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று எழுதும் அரசியல் ஆய்வாளர்கள் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளது இந்த மாவோயிஸ்டுகளின் போராட்டம். இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திவரும் இவ் மாவோயிஸ்டுகள் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். "விடுதலைப்புலிகள் தற்போது பின்னடைவைச் சந்தித்தாலும் தமிழ்த்தேசத்தின் தீர்க்கப்படாத அபிலாசைகள் பல ஆயுதந்தாங்கிய தேசிய விடுதலை இயக்கங்களை எழச் செய்யும்" -இந்திய மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் (24 ஏப்ரல் 2009 ஊடக அறிக்கையில்) "தமிழ்த்தேசத்திற்கு எதிரான போரில் சிறீலங்கா அரசுக்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் தான் எப்போதும் பின்புலமாய் உள்ளது " -மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் (24 ஏப்ரல் 2009 ஊடக அறிக்கையில்) இந்திய அரசுக்கு எதிராக போராடும் மாவோயிஸ்டுகளை ஆதரித்து அவர்களுடன் ஜக்கியப்படுவதன் மூலமே இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை ஈழத் தமிழ் மக்களால் தடுத்து நிறுத்த முடியும். Image may contain: 1 person, outdoor Image may contain: one or more people and outdoor Image may contain: one or more people and outdoor Image may contain: 1 person

No comments:

Post a Comment