Monday, May 25, 2020

•எத்தனை தடைகள் அத்தனையும் தாண்டி நினைவு அஞ்சலிகள்!

•எத்தனை தடைகள் அத்தனையும் தாண்டி நினைவு அஞ்சலிகள்! பொலிசார் தடை இராணுவம் தடை புலனாய்வு துறையினர் தடை நீதிமன்றம்கூட தடை மொத்த அரசும் தடையை மேற்கொண்டது அத்தனை தடைகளையும் தாண்டி தமக்காக மாண்டவர்களை மக்கள் நினைவு கூறிக் கொண்டிருக்கின்றனர். எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ அந்த முள்ளிவாய்க்கால் தொடக்கம் உலகெங்கும் எங்கு தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். முகநூலில் நினைவு அஞ்சலி இணைய தளங்களில் நினைவு அஞ்சலி பாடல்கள் கவிதைகள் கட்டுரைகள் குறும் ஒலி ஒளி நாடாக்கள் என எங்கும் எதிலும் நினைவு அஞ்சலிகளே ஆம். கலை கலாச்சாரம் பண்பாட்டு தளங்கள் எல்லாவற்றிலும் நினைவு அஞ்சலி வடிவங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு விட்டது அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம் மட்டுமே என்றவர் இனப் படுகொலைக்கு நீதி பெறாமல் தமிழ் மக்கள் ஓய்ந்துவிடமாட்டார்கள் என்று இம்முறை அறிக்கை விட்டிருக்கிறார் பத்து வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள் என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து சொல்லியிருக்கும் செய்தி இதுதான். மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியைப் பெறாமல் ஓய்ந்துவிடவும் மாட்டோம். Image may contain: one or more people Image may contain: fire and outdoor Image may contain: 1 person, fire and food Image may contain: one or more people, outdoor and nature

No comments:

Post a Comment