Friday, May 29, 2020

இருவரும் மலையக தமிழர்கள்.

இருவரும் மலையக தமிழர்கள். ஒருவர் திருமதி அமிர்தா அம்பிகை மற்றவர் திரு ஆறுமுகன் தொண்டமான். ஒருவர் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழிலாளி. மற்றவர் அந்த தோட்ட தொழிற்துறைக்கான அமைச்சர். ஒருவர் 52 வயதில் குளவி கடித்து மரணமடைந்துள்ளார். மற்றவர் 56 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 56 வயதில் இறந்தவர் அரசியல்வாதி என்பதால் இளம் வயதில் அநியாயமாக இறந்துவிட்டாரே என்று பலரும் இரக்கப்படுகின்றனர். ஆனால் 52 வயதில் இறந்தவர் கூலித் தொழிலாளி என்பதால் இரக்கம் காட்ட மறுக்கின்றனர். ஒரு தமிழர் அமைச்சராக இருக்கும்போது ஒரு தமிழ் கூலித் தொழிலாளி குளவி கடித்து மரணமடையலாமா என்று கேட்டால், அதற்காக அமைச்சர் வந்து குளவிக் கூட்டைக் கலைக்க வேண்டும் என்கிறீர்களா என்று திருப்பிக் கேட்கிறார்கள். சம்பந்தப்பட்ட கூலித் தொழிலாளி தோட்டத்தில் கொழுந்து பறிக்கும்போதே குளவி கடித்து இறந்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த துயரம் வருடாவருடம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பும் இறந்தால் நட்டஈடும் கொடுக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இல்லையா? சில வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் இதே மலையக பகுதிக்கு வந்தார். அப்போது இந்த குளவிக் கூடுகள் யாவும் இலங்கை அரசு கலைக்கும் நடவடிக்கை எடுத்தது. இந்திய பிரதமருக்கு குளவி கடிக்கக்கூடாது என நடவடிக்கை எடுத்த இலங்கை அரசும் அமைச்சரும் தொழிலாளர்களுக்கு கடிக்கக்கூடாது என ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இப்போது அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் இடத்திற்கு அவரது மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே இனி அடுத்து அமிர்தா அம்பிகையின் மகள் குளவிக் கடிக்கு இறப்பது தவிர்க்க முடியாதது. குறிப்பு - குளவிகளுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செய்து அடுத்தமுறை தொண்டமான் குடும்பத்தில் யாருக்காவது கடித்து விடுங்கள். Image may contain: 1 person Image may contain: ஜெ முருகேசன், glasses and close-up

No comments:

Post a Comment