Friday, May 29, 2020

நான் பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வீடியோக்களை

நான் பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வீடியோக்களை பார்வையிடுவதில்லை. ஏனெனில் அவை இந்து அடிப்படைவாதிகளை விட மோசமானவை. தமிழகத்தில் ஒரு கட்சியில் முக்கிய செயற்பாட்டாளராக இருக்கும் ஒருவர் வீடீயோ ஒன்றை அனுப்பி அதற்கு எப்படி பதில் அளிப்பது என்று என் கருத்தைக் கேட்டார். அதனால் அவர் அனுப்பிய அந்த இஸ்லாமிய தலைவர் ஒருவரின் வீடீயோ உரையை பார்க்க வேண்டியதாகிவிட்டது. ( அந்த வீடியோ கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன் அந்த தமிழக இஸ்லாமிய தலைவர் “பிரபாகரன் இஸ்லாமியர்களின் எதிரி, அவரை ஒருபோதும் இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று கூறுகிறார். பிரபாகரனை ஏற்பதோ இல்லை ஏற்காமல் விடுவதோ அவர் விருப்பம். ஆனால் அதற்காக அவர் பொய் சொல்லக்கூடாது. பொய் சொல்லி மக்களிடையே பிளவுகளையோ மோதல்களையோ ஏற்படுத்தக் கூடாது. பிரபாகரன் பள்ளிவாசலுக்குள் தாக்குதல் நடத்தியவர் என்றும் ஆனால் இஸ்லாமியர்கள் ஒருபோதும் மற்றவர்களின் மத வழிபாட்டிடங்களில் தாக்குதல் செய்யவில்லை என்கிறார். கடந்த வருடம் சஹ்ரான் குழுவினர் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்றபோது இந்த தலைவர் என்ன கோமாவிலா இருந்தார்? தமிழ் மக்கள் அதிக அளவில் இறந்தபொதும் தமிழ் மக்கள் பொறுமை காத்தனர். ஒரு இஸ்லாமியர்கூட தமிழர்களால் தாக்கப்படவில்லை. மாறாக சிங்கள காடையர்களால் அப்பாவி இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டபோது இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுத்தவர்கள் தமிழ் மக்களே. அதுமட்டுமல்ல தமிழ் மற்றும் முஸ்லிம் இன மக்களின் ஒற்றுமை வேண்டும் என்பதற்காகவே கிழக்குமாகாண முதலமைச்சர் பதவிகூட சம்பந்தர் ஐயாவினால் இஸ்லாமியருக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் இந்த பெருந்தன்மையை சில இஸ்லாமிய தலைவர்கள் தமிழ் மக்களின் பலவீனம் என்று நினைக்கிறார்கள். இந்த இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். • இரண்டுஅரோபிய நாடுகள் • 10 அரேபியரல்லாத இஸ்லாமியநாடுகள் • கணக்கில் அடங்காத எண்ணெய்வளம் • அதனால் பெருகும் பணம் மற்றும் ஆயுதங்கள் • வரலாற்று நியாயங்கள் • எல்லாம் வல்ல இறைவன் அல்லா இவை அனைத்தும் இருந்தும் அளுத்கமவில் இஸ்லாமியர் வீடுகள் எரிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லை! அம்பாறையில் இஸ்லாமியரின் நிலம் பறிபோவதை எதிர்க்க முடியவில்லை! 70 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை அகற்றியதை எதுவும் செய்ய முடியவில்லை! • “அல்லாவு அக்பர்” கோசம ;போடுவதாலோ • வெள்ளிகிழமைகளில் கூடிப் பிரார்த்திப்பதாலோ எதுவும் ஆகப்போவதில்லை. இனியாவது கொஞ்சம் யோசியுங்கள்! Image may contain: 1 person, beard and text

No comments:

Post a Comment