Monday, May 25, 2020

இந்தியாவின் சனத்தொகையில் ஹிந்தி பேசும் மக்கள்

இந்தியாவின் சனத்தொகையில் ஹிந்தி பேசும் மக்கள் வெறும் 35 வீதம் மட்டுமே. ஆனால் அங்கு அவர்கள் மற்ற சிறுபான்மை இனங்கள் மீது கலவரங்கள் நடத்துவதில்லை. இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர்கள் 80 வீதம் ஆகும். ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக சிறுபான்மை இன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறார்கள். இது ஏனெனில் இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் தங்களை பெரும்பான்மையினமாக உணர்கிறார்கள். ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் தங்களை பெரும்பான்மையினராக உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் இலங்கைக்கு அருகில் இந்தியாவில் ஏழரைக் கோடி தமிழர் இருப்பதும் வரலாற்றில் பல தடவைகள் அங்கிருந்து படை எடுப்புகள் நடந்ததுமே. சரி. அப்படியென்றால் கைக்கெட்டும் தூரத்தில் ஏழரைக் கோடி தமிழர் இருந்தும் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொல்லும் தைரியம் இலங்கை அரசுக்கு எப்படி வந்தது? அத்துடன், இலங்கையில் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை இலங்கை ராணுவம் கொன்றபோது அதை ஜ.நா மனிதவுரிமைக் கமிஷனுக்கு கொண்டு சென்று நீதி கோரியவர் மகிந்த ராஜபக்சா. எனவே ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்களை கொன்றால் அது ஜ.நா வில் பிரச்சனையாக கொண்டு வரப்படும் என்பது மகிந்த ராஜபக்சாவுக்கு நன்கு தெரியும். அப்படியிருந்தும் அதே மகிந்த ராஜபக்சாவால் எப்படி இவ்வளவு தைரியமாக தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொல்ல முடிந்தது? இந்த இடத்தில்தான் எமக்கு இந்திய அரசு மீதும் தமிழக அரசு மீதும் சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் இருந்தோ அல்லது சர்வ தேசத்தில் இருந்தோ எந்தப் பிரச்சனையும் வராது என்ற உறுதிமொழி இந்திய அரசால் மகிந்த ராஜபக்சாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மகிந்த ராஜபக்சா இனப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு பங்களிப்பு வழங்கியதோடு இன்றும் இலங்கை அரசை காப்பாற்றி உதவி வருகிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்திய அரசு இவ்வாறு தமிழ் மக்களை பழி வாங்குகிறது என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. ராஜீவ் காந்தியைக் கொல்லாவிட்டாலும் இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உதவியிருக்கப்போவதில்லை. அதுவே உண்மை. ஏனெனில் தமிழீழம் அமைவதை தான் விரும்பவில்லை என்றும் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் 1983 முதலே இந்திய அரசு தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவருகிறது. ஏனெனில், தமிழீழம் அமைந்தால் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு உந்து சக்தியாக அமைந்துவிடும். தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடைந்துவிடும் என இந்திய அரசு அச்சப்படுகிறது. அதைவிட முக்கியமான விடயம் புலிகள் இருக்கும்வரை இந்திய அரசால் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யவோ தமிழர்களின் வளங்களை சுரண்டவோ முடியவில்லை. 2009ல் புலிகள் அழிக்கப்பட்டவுடன் தமிழர் பகுதிகள் யாவும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. புலிகளை அழித்தாயிற்று. புலிகளின் பெயரால் ஆயிரக் கணக்கில் தமிழ் மக்களை அழித்தாயிற்று. தமிழர் வளங்களை ஆக்கிரமித்தாயிற்று. ஆனாலும் இந்தியா தன் நாச வேலைகளை நிறுத்தவில்லையே! மன்னாரில் 150 வருடத்திற்கு போதுமான எண்ணெய் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்வளத்தை யார் பெறுகிறார்களோ அவர்களே கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பெறப் போகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவெனில் சம்பூரில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் வேடுவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியதுபோன்று மன்னாரிலும் மக்கள் ஒன்றுபட்டு தம்மை விரட்டிவிடுவார்களோ என்று இந்திய அரசு அஞ்சுகிறது. அதனால்தான் மன்னார் வாழ் மக்களிடையே பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்குதற்காக ஒருபுறத்தில் சிவசேனை சசச்pதானந்தம் இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் மூலமும் இனவிரோத செயற்பாடுகளுக்கு இந்திய உளவுப்படை முயன்று வருகிறது. இங்கு வேதனை என்னவென்றால் இந்த உண்மைகளை புரிந்துகொள்ளாமல் எம்மவர் சிலர் இந்திய அரசின் விசுவாசிகளாக செயற்படுகின்றனர். எந்த இந்திய அரசு இனப்படுகொலையின் பங்காளியாக இருக்கிறதோ அதே இந்திய அரசு இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். எந்த இந்திய அரசு தமிழ் மக்களை நசுக்கிறதோ அதே இந்திய அரசு தமிழ் மக்களுக்க தீர்வு பெற்று தரும் என நம்புகின்றனர். Image may contain: 3 people, text that says ""கருணாநிதியின் உண்ணாவிரத நாட டகத்தின் மூலம் எங்களுக்கு எதிரான மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டோம்! இது எங்களின் மிகச்சிறந்த ராஜ தந்திரம்!" கோத்தபய ராஜபக்சே"

No comments:

Post a Comment