Monday, May 25, 2020

ஒருபுறம் சிறையில் உள்ளவர்களின்

ஒருபுறம் சிறையில் உள்ளவர்களின் விபரங்களை சுமந்திரன் பிரதமரிடம் கையளித்தார் என்று சுமந்திரன் விசுவாசிகள் படம் போடுகின்றனர். இன்னொருபுறம் அமைச்சர் டக்ளஸ் சிறையில் உள்ளவர்களின் விபரங்களை கையளித்தார் என்று ஈபிடிபியினர் படம் போடுகின்றனர். இங்கு ஆச்சரியம் என்னவெனில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சுமந்திரனின் நல்லாட்சி அரசுதானே இருந்தது. அப்போது ஏன் அவர் கொடுக்கவில்லை? இப்போதுகூட இரு வாரங்களுக்கு முன்னர் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்தமைக்கு எதிராக வழக்கு போடப்போவதாக கூறினார். அப்புறம் பார்த்தால் இன்றுபோய் பிரதமரை சந்தித்து கைதிகள் விபரம் கையளித்து பேசியதாக கூறுகிறார். சரி. பரவாயில்லை. ஆனால் இன்னும் ஆச்சரியம் என்னவெனில் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் உண்மையில் பிரதமரிடம் இல்லையா? அவர்கள் இலங்கை அரசின் சிறையில்தானே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் பிரதமர் விரும்பினால் ஒரு போன்கோலில் சிறைத்துறை அமைச்சரிடம் விபரம் கேட்டுப் பெறலாம்தானே? இங்கு வேடிக்கை என்னவெனில் சிறையில் சிங்கள ராணுவ வீரர் இருப்பதை தெரிந்து விடுதலை செய்த பிரதமருக்கு தமிழ் கைதிகள் இருப்பது தெரியவில்லையா? அல்லது, எந்தவொரு கட்சியிடமும் விபரம் கேட்டுப்பெறாமல் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்த பிரதமருக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு மட்டும் யாராவது விபரம் கொடுக்க வேண்டுமா? சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல்தானா ஜனாதிபதி தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் அவர்களை விடுதலை செய்வேன் என மகிந்தா வாக்குறுதி அளித்திருந்தார்? என்னவோ போங்கடா, உங்களின் அரசியல் நாடகத்திற்கு அந்த அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள்தான் கிடைத்தார்களா? Image may contain: one or more people, people standing and indoor

No comments:

Post a Comment