Sunday, May 31, 2020

கலைஞர் கருணாநிதியிடம்

கலைஞர் கருணாநிதியிடம் முத்பதாயிரம் கோடி ருபா சொத்து எப்படி சேர்த்தீர்கள் என்று கேட்டால் அவர் “அந்தம்மா நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்து வைச்சுருக்குது அதை கேட்க மாட்டீங்களா?” என்று பதில் கூறுவார். அதன்படி ஜெயா அம்மையாரிடம் எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்தீர்கள் என்று கேட்டால் “முப்பதாயிரம் கோடி ரூபா சொத்து எப்படி சேர்த்தார் என்று கருணாநிதியிடம் கேளுங்கள்” என்பார். இப்படி மாறி மாறி கூறினார்களேயொழிய கடைசிவரைக்கும் இருவரும் தாங்கள் எப்படி இத்தனை ஆயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தோம் என்று பதில் கூறியதில்லை. அதைவிட முக்கியம் என்னவெனில் “முதலில் நீங்கள் எப்படி சொத்து சேர்த்தீர்கள் என்பதைக் கூறுங்கள்”என்று இவர்கள் இருவரிடமும் கேட்கக்கூடிய தைரியமான ஊடகவியலாளர் ஒருவர்கூட தமிழ்நாட்டில் இல்லை. அத்தகைய தைரியமான(?) ஊடகவியலாளர்களில் ஒருவர், காசுக்காக நான் சீமானுக்கு ஆதரவாக எழுதுவதாகவும் எனக்கு ஆயிரம் ரூபா தன் சம்பளத்தில் இருந்து தருவதாகவும் எழுதியிருக்கிறார். இந்த மூத்த ஊடகவியலாளர் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டார் என்ற நம்பிக்கையில், காசுக்காக நான் சீமானுக்கு எழுதியதற்கான ஆதாரத்தை தரும்படி கேட்டேன். ஆனால் அந்த ஊடகவியலாளர் எனக்கு இதுவரை பதில் தரவில்லை. மாறாக தனது அப் பதிவை நைசாக நீக்கிவிட்டார். என்னைப் பற்றி நன்கு தெரிந்த அந்த மூத்த ஊடகவியலாளர் ஏன் இப்படி எழுதினார் என்று வருத்தத்துடன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அந்த நண்பர் “ பாவம். அவருக்கும் பசிக்குமில்லே” என்றார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த ஊடகவியலாளரின் பதிவை நம்பி பகிர்ந்த சில ஈழத் தமிழர் இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றனர். Image may contain: 1 person, text

No comments:

Post a Comment