Monday, May 25, 2020

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர்.

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர். எம்மை எறும்புகள் போல் நசுக்கிவிட்டதாக கூறி போர் வெற்றிவிழா கொண்டாடுகின்றனர். ஆனால், அவர்கள் ஒரு விடயத்தை உணரவில்லை எத்தனை எறும்புகளை நசுக்கி போட்டாலும் எறும்புகள் வரிசையாக முன்னோக்கி வருமேயொழிய ஒரு எறும்புகூட திரும்பி ஓடுவதில்லை ஆனால் நாலு எருமை ஒன்றாக சேர்ந்தாலே சிஙகம் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஓடும். அதுமட்டுமல்ல சிங்கங்களைவிட எண்ணிக்கையில் எறும்புகள் அதிகம். அதில் ஒரு எறும்பு சிங்கத்தின் மூக்கினுள்ளேயோ அல்லது காதின் உள்ளோயோ நுழைந்துவிட்டால் அப்புறம் சிங்கம் செத்து தொலைவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நாம் எறும்புகளாகவே இருந்து கொள்கிறோம். நீங்கள் சிங்கங்களாகவே இருந்து கொள்ளுங்கள். எறும்புகள் ஒன்று திரள்கின்றன ஒன்று சேர்ந்து ஒருமித்து வருகின்றன இதுவே இன்றைய நாளில் சிங்கங்களுக்கு எறும்புகள் சொல்லும் செய்தி! Image may contain: 1 person, outdoor

No comments:

Post a Comment