Monday, May 25, 2020

•சுமந்திரன் வீசிய பந்து!

•சுமந்திரன் வீசிய பந்து! ஒருபுறம் கொரோனா . மறுபுறம் வலி சுமந்த மாதம். இந்த நேரத்தில் சுமந்திரன் ஏன் இத்தகைய ஒரு பந்தை வீசினார்? தான் கூறும் கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர முடியாத அளவிற்கு சுமந்திரன் ஒன்றும் முட்டாள் இல்லை. அவர் புலிகளை மட்டும் தவறு என்று கூறவில்லை. அவர் ஆயுதப் போராட்டமே தவறு என்கிறார். அதை அவர் கூறுவதற்கு ஆயுதப் போராட்டத்தால் பல்லாயிரம் பேர் மாண்ட மாதத்தை தெரிவு செய்துள்ளார். பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள் என்பதையோ அல்லது அவாகள்; ஏன் மாவீரர்கள் ஆனார்கள் என்பதையோ சுமந்திரனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழ்வதை தனது அதிர்ஷ்டமாக அவர் நினைக்கிறார். ஒருவேளை 1983 இனக் கலவரத்தில் அடிவாங்கி கட்டிய சாரத்துடன் கப்பலில் யாழ்ப்பாணம் வந்து இறங்கியிருந்தால் அவரும் ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்து ஆயுதத்தை தூக்கியிருப்பார். உண்மையில் அவர் சிங்களவருடன் சேர்ந்து வாழ்ந்தது அவர் அதிர்ஷ்டம் இல்லை. மாறாக அவர் சிங்கள இன வெறியர்களிடம் அடி வாங்காததே அவர் அதிர்ஷ்டம் ஆகும். கலவரத்தில் ஒரு தமிழ் ஜயர் சிங்கள காடையர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமே தான் ஆயுதம் தூக்க காரணம் என்று பிரபாகரன் கூறியுள்ளார். அதுபோல் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்களும் தாங்கள் வன்முறை மீது காதல் கொண்ட மன நேயாளிகள் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் சிங்கள ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்கா “பிரபாகரன்கள் உருவாவதில்லை. கடந்த ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளால் உருவாக்கப்படுகிறார்கள்” என்றார். சிங்கள ஜனாதிபதியான சந்திரிக்காவுக்கு தெரிந்த இந்த உண்மையக்கூட தமிழரான சுமந்திரனுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 27 வருடங்கள் சிறையில் இருந்த நெல்சன் மண்டலேவிடம் “ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிக்கை விடுங்கள் விடுதலை செய்கிறோம்” என ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இறுதியாக அவர் விடுதலையானபோது பல உலக நாட்டு தலைவர்கள் அவரை சந்திக்க விரும்பினார்கள். ஆனால் அவர் தான் சந்திக்க விரும்பிய ஒரு தலைவர் பிரபாகரன் என்று கூறியிருக்கிறார். நெல்சன் மண்டலேவுக்கு ஈழப் போராளிகளன் தியாகம் தெரிந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்கிறது. ஆனால் சட்டம் படித்த ஈழத் தமிழரான சுமந்திரனுக்கு அதன் மகிமையை புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பு - நண்பர்களே! அந்த மானஸ்தர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? அல்லது தூக்கில் தொங்கிட்டாரா? Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment