Friday, May 29, 2020

•பாவம்! இவருக்கும் பசிக்கும்ல்லே?

•பாவம்! இவருக்கும் பசிக்கும்ல்லே? நீங்கள் தாராளமாக கலைஞரையும் அவரின் திமுக வையும் ஆதரியுங்கள். இல்லை, வேணுமென்டால்; சோனியாவின் காங்கிரசையும் ஆதரித்து தொலையுங்கள். நீங்கள் யாரை வேணுமென்டாலும் ஆதரியுங்கள். அது உங்கள் விருப்பம். உங்கள் உரிமை. ஆனால் இந்தியா நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்று மட்டும் தயவு செய்து கூறாதீர்கள். ஏனெனில் யுத்தத்தை நடத்தியது மட்டுமல்ல இன்றும்கூட இலங்கை அரசையும் இனப்படுகொலையாளிகளையும் பாதுகாத்து அதரித்து வருவது இந்திய அரசே. இதை உணர முடியாத அளவிற்கு தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அது மட்டுமல்ல முள்ளிவாயக்கால் அழிவு என்பது பத்து வருடத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வு என்று கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு அது வெறும் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது நாற்பதாயிரம் மக்களை இழந்த வலி. அதை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். Image may contain: 1 person, glasses

No comments:

Post a Comment