Sunday, June 30, 2024

யாழ்ப்பாணத்தை சரத்பொன்சேகாவிடம்

யாழ்ப்பாணத்தை சரத்பொன்சேகாவிடம் தானே ஒப்படைத்ததாக ரணில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல , அதன் மூலம் யுத்தத்தில் வெல்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும் தான் பிரதமராக இருந்தபோது மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரணில் ஒரு குள்ள நரி என்று அன்டன் பாலசிங்கம் ஏன் கூறினார் என்பது இப்போது நன்கு புரிகிறது. ஆனால் இங்க கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ரணில் ஜனாதிபதியாக வருவதை தடுத்தது புலிகள் செய்த தவறு என்று சுமந்திரன் கூறி திரிகிறார். ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் தீர்வு கிடைத்திருக்காது மாறாக இனப்படுகொலையே நடந்திருக்கும் என்பதை அவர் பேச்சு நன்கு காட்டுகிறது. அதுமட்டுமன்றி தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் இரண்டு வருடம் சென்றுவிட்டது. அவர் கூறியபடி இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இந் நிலையில் தற்போது மகிந்த கும்பலுடன் சேர்ந்து மீண்டும் ஜனாதிபதியாக வர முயல்கிறார். எனவே இம்முறை யார் வரவேண்டும் என்பதைவிட ரணில் வரக்கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment