Sunday, June 30, 2024

பிரித்தானியாவுக்கு அகதியாக வரும்

பிரித்தானியாவுக்கு அகதியாக வரும் ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற்று தாம் விரும்பும் கல்வியை கற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிரித்தானிய மருத்துவ கல்லூரிகளில் சுமார் 15% மான தமிழ் மாணவர்கள் இருப்பதாக மிச்சம் தொகுதி எம்பி சிரோன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் தமது கடின உழைப்பு மூலம் முன்னேறுவதுடன் நாட்டுக்கு சிறந்த சேவை ஆற்றி வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு சென்ற ஈழத்தமிழர்கள் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ கல்வி பெற முடியவில்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற இவ் ஈழத் தமிழர் நிலை எப்போது மாறும்?

No comments:

Post a Comment