Sunday, June 30, 2024

இன்று தியாகி சிவகுமாரனின்

இன்று தியாகி சிவகுமாரனின் 50வது நினைவு தினம் தமிழ் மக்களுக்காக போராடி உயிர் துறந்த முதல் போராளியின் நினைவு தினம். இறக்கும் தருவாயில்கூட அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் “மீண்டும் பிறப்பேன். மீண்டும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்” ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் இப்போது ஒரு கும்பல் உருவாகியுள்ளது. இந்த கும்பல் தியாகி சிவகுமாரனை நினைவு கூரவில்லை. மாறாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி இதுவரை தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்? அல்லது, இனி என்ன செய்வார் என்ற நம்பிக்கையில் இந்த கும்பல் வாழ்த்து தெரிவிக்கிறது? ஒருவேளை சிவகுமாரனும் போராடி மரணிக்காமல் இந்திய பிரதமருக்கு தேங்காய் உடைத்து வாழ்ந்திருக்க வேண்டும் என இக் கும்பல் கருதுகிறதா? சீ வெட்கம்!

No comments:

Post a Comment