Sunday, June 30, 2024

நம்மிடம் பலம் இருப்பதை

நம்மிடம் பலம் இருப்பதை உணர்ந்தால் காண்டா மிருகத்தைக்கூட துரத்தலாம் காண்டாமிருகம் போல் பலம் இருந்தும் அதை உணராவிட்டால் கண்ட கண்ட நாயும் நம்மைத் துரத்தும் உலகம் முழுவதும் தமிழர்கள் எட்டு கோடிக்கு மேல் இருக்கின்றனர். ஆனால் சிங்களவர்கள் இரண்டு கோடி பேர் மட்டுமே இருக்கின்றனர். ஆனாலும் இரண்டு நாளில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொல்லும் தைரியம் சிங்கள மகிந்த ராஜபக்சாவுக்கு எப்படி வந்தது? ஏனெனில் சிங்களவர்களுக்கு ஒரு நாடும் அரசும் இருக்கின்றது. ஆனால் தமிழர்கள் உலகம் முழுவதும் அடிமையாகவே இருக்கின்றனர். நாடு ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக, பிரதேச ரீதியாக பிரிந்து கிடக்கும் தமிழன் எப்போது இனரீதியாக ஒன்றுபடப்போகின்றான்?

No comments:

Post a Comment