Sunday, June 30, 2024

அகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர்

அகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர் விதுஷா இலங்கநாதன் மருத்துவம் படித்து கடந்த ஆண்டிற்கான சிறந்த இளம் பார்வை மருத்துவருக்கான விருது பெற்றார். அகதியாக இந்தியா சென்ற ஈழத் தமிழர் நந்தினி உரிய புள்ளிகள் பெற்றும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டார். கனடா ஈழத் தமிழ் அகதிகள் மீது காட்டும் இரக்கத்தை இந்திய அரசு ஏன் காட்ட மறுக்கிறது என்று கேட்டால், இந்திய பிரதமரைக் கொன்றதுபோல் கனடா பிரதமரையும் கொன்றிருந்தால் தெரிந்திருக்கும் என்று சில நியாயவான்கள் பதில் அளிக்கின்றனர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது 1991ல். ஆனால் 1983 முதல் அகதிகள் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர் என்பதை இந்த நியாவான்களுக்கு எப்படி புரியவைப்பது? சரி. இவர்களது வாதப்படி பார்த்தாலும் இந்திரா காந்தியைக் கொன்றதற்காக முழு சீக்கிய இனமும் பழி வாங்கப்படுகிறதா, இல்லையே? இனியாவது ஈழத் தமிழ் அகதிகள் மருத்துவ கல்வி கற்க தமிழக முதல்வர் வாய்ப்பு அளிப்பாரா?

No comments:

Post a Comment