Sunday, June 30, 2024

இவர்கள் இந்திய அரசின்

இவர்கள் இந்திய அரசின் விசுவாச ஈழத்தமிழ் தலைவர்கள் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். இந்திய தூதருடன் அடிக்கடி விருந்துண்டு மகிழ்பவர்கள் இவர்கள் ஏன் 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும்படி இந்திய அரசிடம் கோருவதில்லை? அல்லது, பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி கோருவதில்லை? இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழருக்கு உதவாத இந்திய அரசு, இலங்கை வந்து ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தரும் என எப்படி இவர்கள் நம்புகின்றனர்? இன்னும் எத்தனை வருடத்திற்கு இவர்கள் இந்திய அரசை நம்பிக்கொண்டிருக்கப் போகின்றனர்? ஒரு கேள்வி – அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் இனி என்ன செய்யப்போகின்றனர்?

No comments:

Post a Comment