Friday, March 31, 2017

•மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு

•மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு
பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காதவரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலை அடைய முடியாது- தோழர் லெனின்
மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உள்ள பெண்களை அடக்கி வைத்திருக்கும் எந்த சமூகமும் முழு விடுதலையோ உண்மையான முன்னேற்றமோ அடைந்துவிட முடியாது.
வருடத்தில் ஒருநாள் பெண்கள் தினம் கொண்டாடுவதன் மூலம் பெண்கள் விடுதலை அடைந்துவிட முடியாது. உரிமைகள் பெற்றுவிட முடியாது.
இதுவரை பெண்கள் பெற்ற உரிமைகள் யாவும் தானாக கிடைத்தவை அல்ல. மாறாக அவர்கள் போராடி பெற்றவையே.
இனியும்கூட பெண்கள் போராடாமல் எந்த விடுதலையும் பெற்றுவிடமுடியாது என்பதையே வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
அடுப்பு ஊதிய பெண்கள் துப்பாக்கி ஏந்திப் போராடியதாலேதான் அன்று பெண்கள் சயிக்கிள் ஓடுவதை கலாச்சாரக் குற்றமாக கருதிய தமிழ் சமூகம் இன்று லண்டனில் தமிழ் மாணவி ஒருவர் விண்வெளிக்கு செல்ல தெரிவு செய்திருப்பதை வாழ்த்தி வரவேற்றிருக்கிறது.
ஆனாலும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளில் மிகவும் கொடியது அரச ராணுவப் படைகளால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதே.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சி ஒன்றே பெண்களுக்கான முழு விடுதலையை பெற்றுக் கொடுக்கும்.

No comments:

Post a Comment