Friday, March 31, 2017

•சம்பந்தர் அய்யா அவர்களே!

•சம்பந்தர் அய்யா அவர்களே!
துரையப்பாவை துரோகியென்று கொன்றது சரியென்றால்
சுமந்திரனை கொல்ல முயல்வது மட்டும் எப்படி தவறாகும்?
செய்தி- சுமந்திரனை கொல்ல முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தர் அய்யா பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மேயர் துரையப்பாவை துரோகி யென்று முத்திரை குத்தி இளைஞர்களால் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருமே.
துரையப்பாவை பல முறை கொல்ல முயன்ற சிவகுமார் இறந்தபோது அவரை தியாகி என்று அழைத்து அவருக்கு சிலை வைத்தவர் அமிர்தலிங்கமும் தமிழர்விடுதலைக்கூட்டணியினருமே.
பொத்துவில் எம்.பி கனகரத்தினம் கட்சி மாறி அன்றைய ஆளும் கட்சியான ஜ.தே.க ஆதரித்த போது அவரை துரோகி என்றும் அவருக்கு இயற்கையான சாவு வராது என்றும் பாராளுமன்றத்திலேயே மிரட்டியவர் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கமே.
அதன் பின்னரே பொத்துவில் எம்.பி கனகரத்தினம் பிரபாகரனாலும் உமா மகேஸ்வரனாலும் கொழும்பில் வைத்து சுடப்பட்டார்.
அருளம்பலம், தியாகராசா, செல்லையா குமாரசூரியர் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் துரோகி யென்று சுடப்பட்டபோது அதனை அதரித்தவர்கள் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்களுமே.
மாற்று அரசியல் சக்திகளை துரோகி என்று முத்திரை குத்தி அவர்களை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் இந்த அமிர்தலிங்கமும் அவரது தமிழர் விடுதலைக் கூட்டணியினருமே.
துரோகி என்று முத்திரை குத்தி அவர்களை சுட்டுக் கொல்லும் கலாச்சாரத்தை இளைஞர்கள் மத்தியில் தமது சுயநலத்திற்காக உருவாக்கியவர்கள் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருமே.
அப்போதெல்லம் தமிழர்விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகித்த சம்பந்தர் அய்யா இவற்றை எல்லாம் கண்டிக்கவில்லை. மாறாக எம்.பி பதவிக்காக இவற்றை எல்லாம் முழுமையாக ஆதரித்தார்.
அருளம்பலம் , தியாகராசா, செல்லையா குமாரசூரியர் போன்றவர்கள் இலங்கை அரசை ஆதரித்த அதே தவறைத்தான் இன்று சுமந்திரன் அவர்களும் செய்கிறார்.
துரையப்பா எப்படி தனது உயிருக்கு ஆபத்து என்று இலங்கை அரசுடன் சேர்ந்து பல இளைஞர்களை பொலிஸ் மூலம் கைது செய்ய வைத்தாரோ அதேபோன்று சுமந்திரனும் இன்று பல இளைஞர்களை கைது செய்ய வைத்திருக்கிறார்.
துரையப்பா எப்படி இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்தாரோ அதே போன்று சுமந்திரனும் தனது சுயநலத்திற்காக தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார்.
தனக்கு உயிராபத்து என்று கூறி அதன்மூலம் பல இளைஞர்களை சிறையில் அடைக்க சுமந்திரன் செய்தது மட்டுமன்றி தமிழ் இனத்தையே தனது சுயநலத்திற்காக காட்டிக் கொடுத்துள்ளார்.
எனவே துரோகி என்று துரையப்பாவை சுட்டுக் கொன்றது சரி என்றால் துரையப்பாவை விட அதிக துரோகத்தை இழைத்து வரும் சுமந்திரனை கொல்ல முயல்வது எப்படி தவறாகும்?
அதுமட்டுமன்றி துரையப்பாவை துரோகி என்று சுட்டுக் கொன்றதை ஆதரித்த சம்பந்தர் அய்யா சுமந்திரனை துரோகி என்று சுட்டுக் கொல்வதை எப்படி தவறு என்று பேச முடியும்?
சம்பந்தர் அய்யாவைப் பொறுத்தவரை சுமந்திரனை சுட்டால் ரத்தம். துரையப்பாவை சுட்டால் தக்காளி சட்னியா?
சம்பந்தர் அய்யா கூறுவது போல் சுமந்திரனை கொல்ல முயல்வது தவறு அல்ல. மாறாக கொல்லாமல் விட்டு வைத்திருப்தே தவறு.
குறிப்பு- சுமந்திரனை தமிழ் இளைஞர்கள் கொல்ல முயன்றார்கள் என்ற சம்பந்தர் அய்யாவின் கூற்று பொய் குற்றச்சாட்டு ஆகும். தமது சுயநலன்களுக்காக தமிழ் இளைஞர்கள் மீது வீண் பழி சுமத்துகிறார்.

No comments:

Post a Comment