Friday, March 31, 2017

•இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து கோரி ஆறாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்!

•இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து கோரி
ஆறாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்!
இந்தோனேசியாவில் உள்ள தமிழர்கள் தமக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி ஆறாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக இதுவரை எந்தவொரு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும் குரல் கொடுக்கவில்லை.
சம்பந்தர் அய்யா தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமல்ல பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரும் ஆவார். அவர் குரல் கொடுக்க வேண்டியது கடமையாகும். ஆனால் அவர் குரல் கொடுக்கவில்லை.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்க ஜ.நா சென்றுள்ள சுமந்திரனாவது இந்த அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஜ.நா அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்திடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவரும் கேட்க விரும்பவில்லை.
கனடா ஒவ்வொரு வருடமும் 3 லட்சம் அகதிகளை உள் வாங்குகிறது. அண்மையில் சிரிய அகதிகளை கூட உள்வாங்கியுள்ளது. எனவே கனடா வாழ் தமிழ் அரசியல் பிரமுகர்கள் இது குறித்து கனடா அரசுடன் பேசி இந்த அகதிகளை உள்வாங்குவதற்கு முயற்சி செய்யலாம்.
கனடாவில் பராளுமன்ற உறுப்பினராக தமிழர் ஹரி ஆனந்தசங்கரி உள்ளார் அவர் அரசுடன் இது குறித்து பேசி ஏற்பாடுகளை செய்ய முன்வரவேண்டும்.
நியூசிலாந்தில் உள்ள அகதிகள் தொண்டு நிறுவனங்கள்கூட இந்த இந்தோனேசிய அகதிகளை உள்வாங்குதற்கு முயற்சி செய்ய முடியும். முயற்சி செய்ய வேண்டும்.
முதலில் இவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இந்தோனேசிய அரசை வற்புறுத்த வேண்டும். அடுத்து இவர்களை கனடா அல்லது நியூசிலாந்து நாட்டிற்கு வரவழைக்க முயற்சி செய்ய வேண்டும்.
இதற்குரிய முயற்சிகளையும் ஏற்பாடுகளையும் செய்வதற்கு தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
குரல் கொடுக்க முன்வருவார்களா?

No comments:

Post a Comment