Friday, March 31, 2017

•தலைமையை தெரிவு செய்வது மக்களேயன்றி இந்திய துணைதூதர் அல்ல!

•தலைமையை தெரிவு செய்வது மக்களேயன்றி இந்திய துணைதூதர் அல்ல!
சம்பந்தர் அய்யாவின் பின்பு தலைமையேற்க தான் தயார் என்று சிறீதரன் எம்பி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரிடம் தெரிவித்துள்ளார்.
முதலாவது, 
தமிழ் மக்கள் தமக்குரிய தலைமையை தாங்களே தெரிவு செய்வர். தமிழ் மக்களுக்கு யார் தலைமை வகிக்க வேண்டும் என்பதை இந்திய துணை தூதர் தீர்மானிக்க முடியாது.
இரண்டாவது,
சிறீதரன் தனக்கு தலைமைப் பதவியில் விருப்பம் இருந்தால் அதனை தமிழ் மக்களிடம் நேரடியாக கூறவேண்டுமேயொழிய இந்திய துணை தூதரிடம் கூறவேண்டியதில்லை.
மூன்றாவது,
இத்தனை அழிவுக்கும் பின்னர் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்தியாவிடம் தலைமை பதவியை கோருபவர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க எந்தவித தகுதியும் அற்றவர்.
சம்பந்தர் அய்யாவுக்கு பின் தலைமையேற்க தயார் என்று சிறீதரன் எம்.பி அவர்களால் கூறமுடியாது. மாறாக
சம்பந்தர் அய்யா போன்று இந்திய விசுவாசியாக இருப்பேன் என்று கூற சிறீதரனுக்கு தகுதி உண்டு.
சம்பந்தர் அய்யா போன்று தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பேன் என்று கூற சிறீதரன் எம்.பிக்கு தகுதி உண்டு.

No comments:

Post a Comment