Friday, March 31, 2017

•ஆண்டுகள் கழிகின்றன ஆட்சிகள் மாறுகின்றன முதல்வர்கள்கூட மாறுகின்றனர் ஆனால் எழுவர் விடுதலை மட்டும் நடக்கவில்லையே!

•ஆண்டுகள் கழிகின்றன
ஆட்சிகள் மாறுகின்றன
முதல்வர்கள்கூட மாறுகின்றனர்
ஆனால் எழுவர் விடுதலை மட்டும் நடக்கவில்லையே!
எழுவர் விடுதலையை ஜெயா அம்மையார் விரும்பியதாக கூறுகின்றனர். ஆனால் அவர் தனது ஆட்சிக்காலத்தில் அதை நடத்தவில்லை.
ஜெயா அம்மையாரின் ஆட்சியை தொடருவதாக பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அவரும் ஜெயா அம்மையாரின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை.
அடுத்து இப்போது எடப்பாடி பழனிச்சாமி தானும் ஜெயா அம்மையாரின் ஆட்சியை தொடருவதாக கூறுகிறார். அவரும்கூட இன்னும் இந்த எழுவர் விடுதலை குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இந்த எழுவர் விடுதலைக்கு தேவையான சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் இதை ஒரு அறிக்கையாக விடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. இருப்பினும் அவர் கேட்டுக்கொண்டதற்கு அவரை பாராட்ட வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது இந்த எழுவரை விடுதலை செய்ய மட்டுமன்றி அவர்கள் பரோலில் வரவும்கூட அவர் அனுமதிக்கவில்லை.
கலைஞரின் ஆட்சியில் உதவி முதல்வராக இருந்தபோது இந்த எழுவர் விடுதலைக்கு முயற்சி செய்யாத ஸ்டாலின் இப்போது அறிக்கை விடுவது ஏமாற்று அரசியலாக இருக்கிறது.
இப்போது ஸ்டாலின் கேட்டுக்கொண்ட பிறகாவது தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம்.
இதனிடையே இந்த எழுவரை விடுதலை செய்தால் இலங்கையுடனான நட்பு பாதிக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தன்னை கொல்ல வந்த நபரையே மன்னித்து விடுதலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த இந்த எழுவரை விடுதலை செய்வதை ஏன் எதிர்க்க போகிறார்?
எனவே இந்த எழுவர் விடுதலையால் இலங்கையுடனான நட்பு ஒருபோதும் பாதிக்கப்படப் போவதில்லை.
எனவே எழுவரை விடுதலை செய்தால் இலங்கை நட்பு பாதிக்கும் என்பது உண்மையல்ல. மாறாக தமிழர்களுக்கு எதிரான ஆர்.எஸ.எஸ. இன் துவேசமே இது.
இந்நிலையில் இந்து தமிழீழம் கேட்டால் இந்த ஆர்.எஸ.எஸ் ஆதரிக்கும் என்று காசிஆனந்தன் சென்னையில் கூறிக்கொண்டு திரிகிறார்.
பிஜே.பி யாக இருந்தாலும் சரி காங்கிரசாக இருந்தாலும் சரி தமிழர்களின் உணர்வுகளுக்கு ஒருபோதும் மதிப்பளிக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment