Friday, March 31, 2017

•தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழக மீனவனை சுடும் தைரியம் இலங்கை கடற்படைக்கு இருந்திருக்குமா?

•தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழக மீனவனை
சுடும் தைரியம் இலங்கை கடற்படைக்கு இருந்திருக்குமா?
எதிரிநாடுகூட எல்லை தாண்டும் மீனவனை சுடுவதில்லை. ஆனால் நட்பு நாடு என்னும் இலங்கை தொடர்ந்து தமிழக மீனவனை சுட்டுக் கொல்கிறது.
இப்போது இலங்கையில் யுத்தம் இல்லை. புலிகளின் ஆபத்தும் இல்லை. அப்படியிருக்க எதற்காக தமிழக மீனவனை சுட்டுக் கொல்ல வேண்டும்?
டில்லியில் பேச்சுவார்த்தை நடந்த பிறகு துப்பாக்கி சூடு நடக்கிறது என்றால் என்ன அர்த்தம்? டில்லிதான் தமிழக மீனவனை சுடும்படி கூறியுள்ளதா?
இதுவரை 600 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்திய அரசு ஒருமுறைகூட இலங்கை அரசைக் கண்டிக்கவில்லை.
இதுவே ஒரு மலையாளி மீனவனுக்கோ அல்லது வங்காளி மீனவனுக்கோ நடந்திருந்தால் அந்த இனம் சும்மா இருந்திருக்குமா? அல்லது இந்திய அரசுதான் சும்மா இருந்திருக்குமா?
தமிழினம் அடிமையாக இருப்பதால்தானே இலங்கை அரசும் கண்மூடித்தனமாக கொல்கிறது. இந்திய அரசும் அதைக் கண்டுக்காமல் இருக்கிறது.
வருடம்தோறும் 85ஆயிரம் கோடி ரூபா தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறுகிறது. அந்த தமிழக மக்களின் பணத்தில்தான் இலங்கை கடற்படைக்கு அது பயிற்சி வழங்குகிறது.
தமிழக மக்களின் பணத்தில் பயிற்சி பெற்ற இலங்கை கடற்படையே தமிழக மீனவனை சுட்டுக் கொல்கிறது.
உலகில் தன்னை சுட்டுக்கொல்லும் படைக்கு தன் பணத்தில் பயிற்சி அளிக்கும் ஒரே ஏமாளி இனம் தமிழ் இனம்தான்.
இதற்கு எல்லாம் காரணம் தமிழ் இனம் அடிமையாக இருப்பதுதான். தமிழ் இனம் விடுதலை பெற்று தனிநாடாக இருக்குமென்றால் தமிழக மீனவனை சுடும் தைரியம் இலங்கை கடற்படைக்கு வராது.
அதுமட்டுமன்றி தமிழ்நாடு தனிநாடாக இருக்குமென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களும் சுதந்திரம் பெற வாய்ப்பு உண்டு.
எனவே தோழர் தமிழரசன் சுட்டிக்காட்டியது போன்று அடிமையாக இருக்கும் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும். அது குறித்தே இனி தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு , நெடுவாசல், காவிரி என்று ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடுவதை விடுத்து ஒரேயடியாக தனிநாட்டிற்கான போராட்டத்தை தமிழக மக்கள் நடத்த வேண்டும்.
இதுதான் ஒரே வழி.

No comments:

Post a Comment