Friday, March 31, 2017

•தமிழக மீனவனுக்கு தேவை நிதியல்ல நீதியே!

•தமிழக மீனவனுக்கு தேவை நிதியல்ல நீதியே!
சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவனுக்கு 5 லட்சம் ரூபா வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 லட்சம் ரூபா போதாது. 30 லட்சம் ரூபா வழங்க வேண்டும் என சில தலைவர்கள் கோரியுள்ளனர்.
மீனவனுக்கு தேவை நிதியல்ல, நீதியே. அதுதான் இனி வருங்காலத்தில் மீனவ கொலைகளை தடுத்து நிறுத்தும்.
இந்திய எல்லையில் வைத்து இந்திய மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். ஆனால் உலகில் 5வது பெரிய இந்திய கட்ற்படை வேடிக்கை பார்க்கிறது.
பாகிஸ்தான் எல்லைதாண்டி வந்து இந்திய ராணுவ வீரரை சுட்டுக் கொன்றதை கண்டித்த பிரதமர் மோடி இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்து மீனவனைக் கொல்லும்போது மௌனம் காக்கிறார்.
எல்லை தாண்டி வந்து சுட்டு விட்டு தான் சுடவில்லை என இலங்கை கடற்படை சர்வ சாதாரணமாக மறுக்கிறது. ஆனால் ஆதாரங்களை வைத்திருக்கும் இந்திய அரசு அக்கறையற்று இருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்களை ஒரே நாளில் கொன்றுவிட்டு அது குறித்த விசாரணைக்கே மறுத்து வருவது இலங்கை அரசும் அதன் ராணுவமும்.
கடந்த வருடம் வீதியில் சென்ற மாணவர் இருவரை நெஞ்சில் சுட்டுக் கொன்றுவிட்டு வானத்தை நோக்கி சுட்டதில் தவறுதலாக இறந்துவிட்டார்கள் என்று கூறியதே இலங்கை அரசும் அதன் பொலிசும்.
இலங்கையில் தமிழர்களை சுட்டுவிட்டு சர்வ சாதாரணமாக எப்படி இலங்கை ராணுவம் மறுத்து வருகிறதோ அதேபோன்றுதான் தமிழக மீனவனை சுட்டுவிட்டும் சர்வ சாதாரணமாக கடற்படை மறுத்துள்ளது.
இலங்கையில் பௌர்ணமி நாளில் மாடு வெட்டக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் தமிழர்களை தாராளமாக வெட்டிக் கொல்லலாம்.
புத்தர் பெருமான் கொல்லாமையை போதித்தார். ஆனால் அவர் அதில் தமிழர்களை கொல்லக் கூடாது என்று சொல்லவில்லை போலும். அதனால்தான் இலங்கையில் புத்தரின் பேரால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
இலங்கை கடற்படை தான் சுடவில்லை என்று திமிராக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை வருத்தம் தெரிவித்தால் போதும் என்று அமைச்சர் ராதாகிருஸ்ணன் கூறுகிறார்.
யாராவது அமைச்சர் ராதா கிருஸ்ணனை கொன்றுவிட்டு வருத்தம் தெரிவித்தால் அதனை அவர் ஏற்றுக்கொள்வாரா? இப்படிப்பட்ட வெங்காயம் எல்லாம் எப்படி அமைச்சராக இருக்குது?
மாட்டைக் கொல்லக்கூடாது என்று அக்கறை கொள்ளும் இந்திய பிரதமர் மோடி தமிழன் கொல்லப்படும்போது அக்றை இல்லாமல் இருக்கிறார்.
இந்தியாவில் மாடு தமிழனைவிட மதிப்பு மிக்கதா? தமிழன் உயிர் என்றால் அத்தனை கேவலமானதா?
தமிழ் பொறுக்கிகள் கட்டுமரத்தில் போய் இலங்கை கடற்படையுடன் மோதட்டும் என்று சுப்பிரமணியசுவாமி கிண்டல் செய்கிறார்.
இதுவே ஒரு மiயாளி அல்லது கன்னடன் இறந்திருந்தால் இப்படி சுப்பிரமணியசுவாமி கிண்டல் செயய முடியுமா?
தமிழனின் இந்த நிலைக்கு என்ன காரணம்? தமிழன் அடிமையாக இருப்பதுதான் காரணம்.
தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைவதே தமிழன் தலை நிமிர ஒரே வழி.

No comments:

Post a Comment