Friday, March 31, 2017

•இந்தியா வாழ வேண்டுமானால் தமிழக மீனவன் சாக வேண்டுமா?

•இந்தியா வாழ வேண்டுமானால்
தமிழக மீனவன் சாக வேண்டுமா?
இந்தியா வாழ்வதற்கு தமிழகம் தன்னை தியாகம் செய்ய வேண்டும் என்று இல. கணேசன் கூறினார்.
அதற்காக அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்தமைக்கான பரிசு அது.
அதேபோன்று இந்தியா வாழ்வதற்காக தமிழக மீனவன் சாக வேண்டும் என்று இன்னொருவர் கூறக்கூடும்.
அவ்வாறு கூறுவதற்காக அந்த இன்னொருவருக்கும் அமைச்சு பதவி பரிசாக வழங்கப்படவும் கூடும்.
யாரும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். இந்த கேட்டை எல்லாம் பார்க்க வேண்டும் என்பது தமிழன் தலைவிதி போலும்.
இங்கு எமது கவலை என்னவென்றால் தமிழக மீனவனின் அழுகையை நிறுத்துவது யார்? அவன் கண்ணீரை துடைப்பது யார்?
இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவன் அழுது கொண்டேயிருப்பது? அவன் நிம்மதியாக வாழ்வது எப்போது?
தமிழனாக அதுவும் மீனவனாக பிறந்தது குற்றமா?
கடல் மேல் மிதக்க விட்டான் - அவன்
கண்ணீரில் கரைய விட்டான்!

No comments:

Post a Comment